மாலதி கிண்ண உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022
மாலதி தமிழ்க் கலைக்கூடம் 19.02.2022 சனி அன்று 15ஆவது உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை நடாத்தியிருந்தது. இப்போட்டியானது இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக வருடா வருடம் நடாத்தப்படும் போட்டியாகும்.
ஆயினும் கொரோணா நெருக்கடியினால் சென்ற ஆண்டு நடத்த முடியாது போன இச்சுற்றுப் போட்டியானது இம்முறை கூடுதலான அணிகளின் பங்கேற்போடு கூடுதல் பார்வையாளர்களின் வருகையுடன் மிக உச்சாகமாக நடைபெற்றிருந்தது.
போட்டியானது தாயக மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களையும் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கத்தை செலுத்திக்கொண்டு மாலதி தமிழ்க் கலைக்கூட பாடல் ஒலிபரப்பியதை அடுத்து கலைக்கூட மேலாளர் தில்லைநடராசா அருளானந்தராசா அவர்களின் உரையோடு விளையாட்டு வீரர்களுக்கான போட்டி விதிமுறைகளை வழங்கிகொண்டு அரங்கு விளையாட்டு வீரர்களுக்கு இடம் கொடுத்தது.
போட்டியானது மிக விறுவிறுப்பாக இரு மைதானங்களில் நடைபெற்றது போட்டியில் கலைக்கூட மாணவர்கள், பழைய மாணவர்கள், இளையவர்கள், பெண்கள் என பல அணிகள் பங்கேற்று சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுப் போட்டியின் இறுதியில் பங்கேற்ற அணைத்து போட்டியாளர்களுக்கும் பதக்கங்கள் அணிவித்ததோடு முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற அணிகள்.
ஆண்டு. 2012, 2011, 2010
மூன்றாம் இடம் :- Herning/Randers
இரண்டாம் இடம்:- Helsingborg
முதலாம் இடம்:- Holbæk
ஆண்டு. 2009,2008
மூன்றாம் இடம் :- Helsingør
இரண்டாம் இடம்:- Grindsted
முதலாம் இடம்:- Skjern
ஆண்டு. 2007,2006
மூன்றாம் இடம் :- Århus
இரண்டாம் இடம்:-Struer
முதலாம் இடம்:- Helsingør
ஆண்டு. 2005,2004
மூன்றாம் இடம் :- Grindsted
இரண்டாம் இடம்:- Herning
முதலாம் இடம்:- Skjern
பெண்கள்
மூன்றாம் இடம் :- Horsens
இரண்டாம் இடம்:-Dantam
முதலாம் இடம்:- Randers
ஆண்கள் மூத்தவர்கள் (Senior)
மூன்றாம் இடம் :-Vejle/Horsens
இரண்டாம் இடம்:- TFC Fredricia
முதலாம் இடம்:- Dantam
வெற்றி கிண்ணங்கள் வழங்கியதை அடுத்து ‘தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம’ எனும் உறுதி ஏற்புடன் நிகழ்வுகள் நிறைவு செய்யப்பட்டன.